இன்று முதல் குளிர்சாதன புறநகர் ரயில் சேவை இயக்கம்
சென்னை, ஏப். 18- சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட வழித்தடங்களில் தினசரி 700 ரயில்களுக்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் புறநகர் ரயிலில் ஏ.சி பெட்டிகளை இணைக்க உள்ளதாக கடந்த வருடம் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த பணிகள் நடப்பு ஆண்டில் இம்மாதம் (ஏப்ரல்) முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டி ருந்தது. அதன்படி சென்னையில் ஏப்ரல் முதல் வாரத்தில் ஏசி ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாம்பன் பாலம் திறப்பு விழாவோடு சேர்த்து இதைத் தொடங்கலாம் என திட்டமிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் மீண்டும் தேதி தள்ளிப் போனது. இதனால் பயணிகள் அதிருப்தி தெரி வித்திருந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன புறநகர் ரயில் சேவை சனிக்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு இடையே 14 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.