tamilnadu

மாதர் சங்க புதுச்சேரி தலைவர் தோழர் வெ.சந்திரா மறைவுக்கு சிபிஎம் மாநிலச் செயற்குழு இரங்கல்....

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு உறுப்பின ரும், மாதர் சங்கத்தின் தலைவருமான தோழர் வெ.சந்திராமறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு  இரங்கல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச தலைவருமான தோழர் வெ. சந்திராஅவர்கள் ஆகஸ்ட் 12 அன்றுகாலை  காலமானார் என்றசெய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.தலைமையாசிரியரான தோழர் சந்திரா  பணியில் இருந்த காலங்களில் மாணவர்கள் மற்றும் அதிகாரிகளால் மிகவும் மதிக்கப்பட்டவர். தனது பணி ஓய்வுக்குப் பிறகு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், மாதர் சங்க வளர்ச்சிக்காக வும் அரும்பாடுபட்டவர்.  புதுச்சேரி பிரதேசக்குழு உறுப்பினராகவும், மாதர் சங்கத்தின் தலைவராகவும் சுறு சுறுப்பாகவும் அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றி யவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், ஜனநாயக மாதர்சங்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தோழர் சந்திரா மறைவால் துயருற்றுள்ள அவரதுகணவர், மகன்கள், மகள்மற்றும் குடும்பத்தினருக்கும், புதுச்சேரி பிரதேச கட்சி தோழர்களுக்கும், மாதர் சங்க தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு தனதுஅனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

;