tamilnadu

img

தோழர் பி. இலக்குவன் மறைவுக்கு சிபிஎம் மாநிலச் செயற்குழு இரங்கல்.....

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் பி.இலக்குவன் மறைவுக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் கரூர் மாவட்டச்செயலாளருமான அன்புத் தோழர் பி. இலக்குவன் அவர்கள் உடல்நலக்குறை வால் மே 27 அன்று அதிகாலை  அவரதுஇல்லத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளானோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில்ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன்.தனது எளிமையான, எழுச்சியான பேச்சின் மூலமும், மேடை பாடல்கள் மூலமும் கரூர் மாவட்டத்தில் கட்சியை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றியவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரதுமறைவால் துயருற்றுள்ள அவரது மனைவிமற்றும் மகள்கள், மகன் ஆகியோருக்கு கட்சியின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

;