tamilnadu

img

கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம்!

சட்டப்பேரவையில் இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்களாக கேள்வி நேரத்தின் போது கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்துப் பேச வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்திற்குப் பின்பு பேச அனுமதி தருவதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்த நிலையிலும் தொடர் அமளியில் அதிமுக-வினர் ஈடுபட்டனர். 
இந்த நிலையில், சட்டப்பேரவை விதிகளுக்குப் புறம்பாகவும் மரபுகளுக்கு மாறாகவும் குழப்பம் விளைவித்த அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர்  உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர்  உத்தரவிட்டுள்ளார்.