tamilnadu

img

காத்திருக்கும் போராட்டத்தால் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு பணி ஆணையை வழங்கிய பிடிஓ

திருவள்ளூர், ஜூலை 9- பழங்குடி இன மக்களுக்கு குடி மனை பட்டா, தொகுப்பு வீடுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்த கோரிக்கைகளை  நிறைவேற்ற வலி யுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (ஜூலை 9), திருத்தணி ஆர்டிஒ அலு வலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், திருத் தணி வட்டத்திற்கு உட்பட்ட பங்களா மேடு பகத்சிங் நகர், கோரமங்கலம், வி.கே.ஆர்.புரம், பெரியகடம்பூர், தாரூர் இ.என்.சுண்டிகை, பீரகுப்பம் நிலம் அளவீடு, பங்களாமேடு நிலம் அளவீடு, உள்ளிட்ட 30 கிராமங்களில் வாழும் இருளர் இன மக்கள் தங்க ளுக்கு குடிமனை பட்டா, தொகுப்பு வீடுகள், வழங்க வேண்டும். பல கிராம ங்களில் அரசு கொடுத்த பட்டாக்க ளுக்கான இடங்களை அளவீடு செய்து பயனாளிகளுக்கு தரவேண்டும், பந்தி க்குப்பம், எரும்பி ஆகிய கிராமங் களில் சுடுகாடு அமைத்து தர வேண்டும், கோபாலபுரத்திற்கு மின் சார வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வந்தனர். 

இதன் விளைவாக 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிமனை பட்டா, 50 க்கும் மேற்பட்ட வர்களுக்கு இனச் சான்றிதழ் உடனடி யாக வழங்கப்படும் என திருத் தணி கோட்டாட்சியர் மற்றும் வட்டாச்சியர் ஆகியோர் எழுத்து பூர்வ மாக உறுதியளித்தனர். 150 குடும்பங் களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்கப் படும் எனவும் பிடிஒ- வும்  எழுத்து பூர்வமாக உறுதியளித்திருந்தனர். 3 ஆண்டுகள் கடந்த பிறகும்அதி காரிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இந்த நிலை யில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் திருத்தணி கோட்டாட்சி யர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த ச்சென்றபோது காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. தடுத்து நிறுத்தியபோது கடும் எதிர்ப் பையும் மீறி பழங்குடியின மக்கள் உள்ளே நுழைந்து போராட்டத்தில் ஈடு பட்டனர். பின்னர் சமையல் செய்ய,  பாத்திரங்கள், அரிசி ஆகியவற்றை கொண்டு வந்த போது காவல்துறை யினர் தடுத்து சமைக்க விடாமல் எல்லா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதற்கு  எதிர்ப்பு தெரி வித்து முழக்கமிட்டனர்.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாநில துணைச் செயலாளர் இ.கங்கா துரை, மாநில துணைத்தலைவர் ஏ.வி. சண்முகம், மாவட்டப் பொருளாளர் எஸ்.குமரவேல், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டப் பொரு ளாளர் சி.பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல்அகமது,  மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.அந்தோணி, பி.அற்புதம்,  வி.பாலாஜி, ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.கரி முல்லா, தமிழரசி, தேவி உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

விரைவில் சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கீடு 

போராட்டத்தை தொடர்ந்து ஆர்டிஒ தீபா, சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசினர். அதில் முதல் கட்டமாக தாழவேடு இருளர் காலனியில் வசிக்கும் நான்கு குடும்பத்திற்கு பட்டாக்களை வழங்கினார்.  தொகுப்பு வீடுகளை கட்ட 177 குடும்பங்களுக்கு பணி ஆணையை திருத்தணி பிடிஒ வழங்கினார். 

அடுத்த ஒரு மாதத்தில் நிறைவு செய்யப்படும். என கோட்டாட்சியர் தெரிவித்தார். பந்திக்குப்பம் கிராமத்திற்கு சுடுகாட்டுக்கான நிலத்தை விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும் என  அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதில் வட்டாட்சியர்கள் மதியழகன், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்ட னர்.