சென்னை,ஜூன் 24- சென்னை ஆழ்வார்பேட் டையில் டி.டி.கே சாலையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன டாக்டர் அகர்வால்ஸ் கண்மருத்துவ மனையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்களன்று தொடங்கிவைத்தார். புதிய மருத்துவ மனையை திறந்துவைத்து பேசிய அவர், பல ஆண்டுகளாக தமிழ்நாடு மருத்துவ சுற்றுலாத்துறை யில், குறிப்பாக கண் மருத்துவமனையில் தனக்கென தன் பெயரை பதித்துள்ளது என்றார். இம் மருத்துவமனை சென்னையில் மட்டு மல்லாது, நாடு முழுவதும் கண் தொடர்பான சிகிச்சைக்கு ஒரு பெயர் பெற்ற மருத்துவமனையாக உள்ளது.அகர்வால்ஸ் மருத்துவமனையின் இப்புதிய அமைவிடம் கண் மருத்துவ சிகிச்சையில் ஒரு புதிய தரத்தை பதிக்கும் என்பதுடன் இது சென்னை மக்களுக்கு மட்டுமல்லாமல் பிற மாநில மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பது உறுதி,” என்றார். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் கூறுகையில், கண் சிகிச்சை மருத்துவத்துறை யில் எங்களுடைய ஆராய்ச்சி அதிநவீன சிகிச்சை மற்றும் பகுப்பாய்வுக்கு வழிவகுத்ததுடன் மிகவும் சிக்கலான கண் அறுவைசிகிச்சைகளை மிகவும் வெற்றிகரமாக கையாள்வதற்கும் உதவியுள்ளது என்றார். திமுக எம்பி தயாநிதி மாறன்,எம்எல்ஏ ஜெ.அன்பழன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் கண்தானம் வழங்குவதற்கு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.