சென்னை,ஆக.7- சென்னை தியாகராய நகர் தொகுதி எம்எல்ஏவான சத்யாவுக்கு எதிராக 300-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. வினர் தலைமை கழகத்தில் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள சத்யா தியாகராய நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார். 2 மாதத்திற்கு முன்பு தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் 400 பேர் ஒரே நேரத்தில் கூண்டோடு நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மாதம் 26-ந்தேதி தலைமை கழகத்தை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்ட த்தில் ஈடுபட எதிர்கோஷ்டி யினர் திட்டமிட்டு இருந்த னர். இந்த தகவல் உளவுத்துறை மூலம் முதல்- அமைச்சருக்கு தெரிய வந்த வுடன் அவர் வேலூர் தேர்தல் முடிந்தவுடன் பொறுப்புகள் வழங்கப்படும் என்று கூறி அப்போது நடைபெற இருந்த போராட்டத்தை தள்ளி வைத்தார்.இந்த நிலையில் மாவட்ட செய லாளர் சத்யாவின் எதிர்கோஷ்டியினர் புதனன்று ராயபேட்டையில் அதிமுக தலைமை அலுவல கத்தை நோக்கி அவ்வை சண்முகம் சாலையில் ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து மறித்தார்கள். இதனால் போலீ சாருக்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரின் தடையை மீறி கட்சி அலுவல கத்திற்குள் தொண்டர்கள் புகுந்தனர். வளாகத்தில் அமர்ந்து மாவட்ட செயலா ளரை எதிர்த்து கோஷமிட்ட னர். பின்னர் தலைமை கழக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.இதனால் அதிமுகவில் மீண்டும் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. இதே போல பல மாவட்டங்களி லும் கோஷ்டி பூசல் தீவிர மடைந்து வருவதாக செய்தி கள் தெரிவிக்கின்றன.