சென்னை, ஜூலை 7- வடகிழக்கு பருவ மழையின் போது சென்னை மனப்பாக்கம் பகுதியில்அடையாறு ஆற்றின் உபரி நீர் கரையோர பகுதிகளை பாதிக் காமல் இருக்க தடுப்பு நடவடிக்கை களை மாநில நீர்வள ஆதாரத்துறை மேற்கொண்டுள்ளது.
மனப்பக்காத்தில் மியாட் மருத்து வமனை பாலத்திலிருந்து அடை யாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட் டுள்ள விமான ஓடுதளங்களை உள்ள 3.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு கரை பகுதியை பலப்படுத்தும் பணிகள் ரூ.24.80 கோடி செலவில் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் தற்போது நிறைவடையும் தருவா யில் உள்ளன. மிக்ஜாம் புயலையொட்டி ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது நந்தம்பாக்கம், மணப்பாக்கம், கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத் தின்போதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் இப்பகுதி யில் அடையாறுஆற்றில் 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இதனால் அந்த வெள்ள நீர் இருபுறமும், கரையை உடைத்துகொண்டு தாழ் வான பகுதிகளில் புகுந்தது. மியாட் மருத்துவமனை எதிரே ரிவர்வியூ காலனி பிரதான சாலையில் பல வீடு களில் வெள்ள நீர் புகுந்தது. இந்த வெள்ளத்தால் நந்தம்பாக்கம் தடுப் பணை -மியாட் பாலம் இடையே ஆற்றில் பெரிய குளம் ஒன்று உரு வானது. இதையடுத்து வரும் மழை காலத்தில்வெள்ளநீர் அடையாறு ஆற்றையொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் புகாதவாறு தடுக்க நீர்வள ஆதாரத்துறை 1.2கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆற்றின் ஓரம் தடுப்புச்சுவர் கட்டி வருகிறது.
இதில் 80 விழுக்காடு பணிகள் முடிந் துள்ளன. இந்த தடுப்புச்சுவர் 5 மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்டுள் ளது. வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாமல் இந்தச் சுவர் தடுக்கும். இந்த பகுதியில் வெள்ளத்தை தடுக்க இது நிரந்தர ஏற்பாடாக இருக்கும் என்றும் நீர்வ ளத்துறை அதிகாரிகள் தெரிவித் தனர். மண் அரிப்பால் சுவர் விழுந்து விடாதவகையில் வலுவான தூண்க ளுடன் கட்டப்பட்டு வருகிறது. மழை நீர் வடிகால்களில் ஆற்றில் வரும் வெள்ளநீர் புகாதவாறு மதகுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
அடையாறு ஆற்றில் மழைநீரை சேகரிக்க 3 இடங்களில் புதைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில்சேகரிக்கப்படும் தண்ணீர் செடி களுக்காக பயன்படுத்த வருகிறது. வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக இப்பகுதியல் நீர்வள ஆதாரத்துறை ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் ஒரு பகுதி நிலத்தை யும் பயன்படுத்தியுள்ளது.