வேலூர், அக்.13- வாணியம்பாடியை அடுத்த, அம்பலூர் அருகே தேங்காய் தோப்பு வட்டத்தில் பாலாற்றங்கரையில் பாதி உடைந்த நிலையில் ஒரு நடுகல் கண்டுபிடிக்கப்ப ட்டது. இது குறித்து, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேரா சிரியர் பிரபு கூறியதாவது: இயந்திரத்தில், இப்பகு தியில் தூர் வாரிய போது, இந்த நடுகல் இரண்டாக உடைந்துள்ளது. மண்ணில் புதைந்துள்ள இந்த நடு கல்லை ஆய்வு செய்ததில், கி.பி., 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால சோழர்கள் ஆட்சியை சேர்ந்தது என தெரியவந்தது. நடுகல்லில், ஒரு வீரனின் வலது கையில் போர்வாள் உள்ளது. இடது கையில் தற்காப்பு கேடயம் உள்ளது. போரில் எதிரி விட்ட அம்பு வீரனின் மார்பில் பாய்ந்து இறந்து கிடக்கிறார். போரில் உயிர் விட்ட வீரனுக்காக நடுகல் எடுக்கப்பட்டது. நடுகல்லின் உடைந்த நிலையில் மேற்புறம் மட்டும் கிடைத்து ள்ளது. அதை இப்பகுதி மக்கள், சலவை கல்லாக பயன்படுத்துகின்றனர். கல்லின் கீழ்புறம் காண வில்லை. இது போன்ற நடுகல் இப்பகுதியில் நிறைய உள்ளது. இப்பகுதியில் நீண்ட காலமாக போர்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தொல்பொருள் ஆய்வு த்துறையினர், இது போன்ற நடுகற்களை கண்டு பிடித்தால், ஏராளமான மன்னர்கள் வரலாறுகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.