சென்னை, ஏப்.7- மக்களவைத் தேர்தலில் பாஜகவை ஆதரித்துத் தன்னால் பிரச்சாரம் செய்ய முடியாது என்று அக் கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு அறி வித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜே.பி. நட்டாவுக்கு கடி தம் எழுதியுள்ள அவர், “2019-இல் தில்லியில் துர திர்ஷ்டவசமாக நடந்த விபத்தில் எனக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னைத் துன்புறுத்துகிறது. தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் குணமடையாத நிலையில் இருக்கிறேன்.
இத்த கைய சூழலில் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று எனது மருத்துவக் குழு கண்டிப்புடன் அறிவுறுத்தி யது. பிரச்சாரம் செய்தால் உடல்நிலை இன்னும் மோசமாகும் எனவும் எச்சரித்தனர். எனினும், டாக்டர்கள் அறிவுரைக்கு எதிராக வலி மற்றும் வேதனைகள் இருந்தாலும் என்னால் முடிந்தவரை பிரச்சாரம் செய்தேன். ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டது. இத னால் தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் என் னால் பங்கேற்க முடியாது என்பதை கணத்த இத யத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.