tamilnadu

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரம்: அதிகாரி மீது நடவடிக்கை

சென்னை, ஏப்.23- சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, “மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் அத்துமீறி நுழைந்த விவகாரம் குறித்த விசாரணை அறிக்கை கிடைத்து விட்டது. அது தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றார்.வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு குறித்து தேர்தல் டிஜிபி, காவல் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகளுடன் புதனன்று (ஏப்.24) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.வாக்காளர்கள் நீக்கப்பட்ட புகார் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத போது, நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

;