tamilnadu

சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை

சென்னை, ஜூலை 14- சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னையில் சாலையோரங்களில் வளர்ந்துள்ள மரங்களின் மீது ஆணி அடித்து  பல தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகை கள் வைக்கின்றன. மேலும், மின்சார வயர்கள்,  டியூப் லைட், சீரியல் லைட் போன்றவையும் மரங்கள் மீது வைக்கப்படுகிறது. இது போன்று  சட்டவிரோதமாக வைக்கப்படும் விளம்ப ரங்கள் மற்றும் மின்சார சாதனங்களை அகற்ற  உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் ஜெய லட்சுமி என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்த ரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில்  செவ்வாயன்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மரங்கள் மீது விளம்பர  பலகைகள் வைக்கப்படுவதால், மரத்தின்  வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக  2018 ஆம் ஆண்டு மாநகராட்சியிடம் கொடுத்த  மனு மீது இதுவரை முறையான நடவடிக்கை  எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான  வழக்கறிஞர், சாலையோர மரங்களை சேதப்  படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்  படும் என உறுதியளித்தார். இந்த வாதங் களை கேட்ட நீதிபதிகள், சென்னையில் மரங்களை சேதப்படுத்திய தனியார் நிறு வனங்கள் குறித்த விவரங்களை மனுதாரர் 6 வாரத்திற்குள் மாநகராட்சியிடம் வழங்க வேண்டும் எனவும், அடுத்த 8 வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது  நடவடிக்கை எடுத்து அதனை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

;