சென்னை ராயபுரத்தில் உள்ள ரயில்வே அச்சகத்தை மூடும் ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தியும், அச்சகத்தை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் டிஆர்இயூ பொதுச்செயலாளர் வி.அரிலால் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை சந்தித்து மனு அளித்தார். அப்போது தலைவர் ஜி.சுகுமாறன், உதவி தலைவர் பேபி ஷகிலா, உதவி பொதுச்செயலாளர் பேபி ஷகிலா, எஸ்.அருண்குமார் செழியன், இணைப் பொதுச்செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.