தனியார்மயமாக்கும் அரசாணைகளை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அமைப்புகளில் தூய்மைப் பணி உள்ளிட்ட இதர பணிகளைத் தனியார்மயமாக்கும் அரசாணைகள் 152,139,115,10-ஐ ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தை வழங்க வேண்டும், 10 அண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களை, ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஆக.27) சென்னையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர்.
இதில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.