tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் தேவை

சாதிமறுப்பு இணையர்கள் கோரிக்கை

சென்னை, பிப்.27- கனிமொழி எம்.பி. தலைமையிலான திமுகவின் தேர்  தல் அறிக்கை தயாரிப்பு குழுவைச் சந்தித்து தமிழ்நாடு  சாதிமறுப்பு இணையர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு வழங்கினர்.

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்; சுயமரியாதை-சாதி மறுப்பு திருமணங்களை பதிவு செய்ய பெற்றோர் சம் மதம் இல்லை என்ற காரணத்திற்காக திருமணத்தை பதிவு  செய்ய மறுக்கக்கூடாது என அனைத்து சார்பதிவா ளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்; டாக்டர்  முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவித் திட்டத்  தின் கீழான உதவித் தொகையை ஒரு லட்சமாக உயர்த்தி  வழங்க வேண்டும்” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாம்பன் கடலில் இறங்கி போராட்டம்
இராமேஸ்வரம், பிப்.27- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க.  அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான  விரோதப் போக்கைக் கண்டித்து செவ்வாயன்று காங்கி ரஸ் கட்சியினர் பாம்பன் கடலில் இறங்கி மனிதச் சங்கிலி  போராட்டம் நடத்தினர்.

இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில், விஜய்வசந்த் எம்.பி., கரு. மாணிக்கம் எம்எல்ஏ, தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ்  தலைவர் ஜோர்தன் ஆகியோர் முன்னிலையில் இராமேஸ்  வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலிப்  போராட்டம் நடைபெற்றது.

அரசு மருத்துவர்களின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் அரசுப்பணி: அமைச்சர் தகவல்
சென்னை, பிப்.27- “பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்  துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி  கருணை அடிப்படையில் அரசுப் பணி  வழங்கப்படும்” என்று அமைச் சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

“மருத்துவர்கள் இறந்த 3 ஆண்டு களுக்குள் வாரிசுகள் பதிவு செய்தால் அரசுப் பணி நியமனம் செய்யப்படும். வாரி சுகள் விண்ணப்பித்தால் இளநிலை உத வியாளர், தட்டச்சர், அலுவலக உதவியா ளர் என்ற மூன்று பணிகளில் ஒரு பணியை  வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது”. 

இளநிலை உதவியாளர் பணி வேண்டி விண்ணப்பிப்பவர்கள் காத்தி ருந்து அப்பணியை பெற்றுக் கொள்வ தைக் காட்டிலும் ஒரு 6 மாத காலம்  தட்டச்சர் பயிற்சியை பெற்று விண்ணப் பித்தால் தட்டச்சர் பணிக்கான ஆணை கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.