tamilnadu

img

தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை, செப்‌.22- தமிழகத்தில் அடுத்த 5 நாட் களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென் னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித் துள்ளது

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப்டம்பர் 23 முதல் 28  ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று அறிவித்துள்ளது.

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு

மேற்கு வங்கத்தை ஒட்டி  புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.