tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்

விடுதலைப் போராட்ட வீரர், தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என பன்முகம் கொண்ட போர்க்குணம் மிக்க தலைவர் சி.கோவிந்தராஜன்.

கடலூர் மாவட்டத்தில் 1921 செப்டம்பர் 15இல் பிறந்த சி.கோவிந்தராஜன் மாணவப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் தொழிலாளர் உரிமைக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்.

இஐடி பாரி சர்க்கரை ஆலை தொழிலாளர் நலனுக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடியவர். தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 52 பேரில் சி.கோவிந்தராஜனும் ஒருவர்.  சிஐடியு தலைவராகச் சிறப்புற செயல்பட்டவர்.

மக்கள் நலனுக்கான போராட்டங்களில் முன்னின்றதால் 1977, 1989- ஆம் ஆண்டுகளில் நெல்லிக்குப்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்வு பெற்று மக்கள் பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டவர்.

தம் வாழ்நாள் இறுதி வரை பொதுவுடமை லட்சியப் பயணத்தை தொடர்ந்தவர்.

அவரது பணியை பின்தொடர்ந்து பொதுவுடமைச் சமுதாயம் படைக்க உழைத்திட உறுதியேற்போம்.