tamilnadu

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மீக பயணத்தின் முதல் கட்ட பயணம் 200 முதியோர்களுடன் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி சென்னை கந்த கோட்டத்தில் இருந்து தொடங்கியது. 2ம் கட்ட பயணம் திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த 210 முதியோர்கள் பயன் பெறும் வகையில், செவ்வாயன்று பழனி முருகன் கோவிலில் தண்டபாணி நிலையத்தில் இருந்து தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தார். பக்தர்களின் ஆன்மீக பயணத்தை பழனி உதவி ஆட்சியர் கிஷன்குமார் தொடங்கி வைத்தார். கோவில் துணை ஆணையர் வெங்கடேசன், உதவி ஆணையர் லட்சுமி, பழனி நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, துணைத்தலைவர் கந்தசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.