நிலவில்லா வானை இரவில் பார்த்து ரசித்த அனுபவம் உங்க ளுக்கு உண்டா? அப்போது சில சமயம் வானில் வேகமாக விரைந்து செல்லும் பளிச்சென்ற வெளிச்சக் கீற்றுகளைப் பார்த்துள்ளீர்களா? அவற்றைத்தான் நாம் விண்கல் என்று அழைக்கிறோம். இவற்றின் வேகம் சுமார் நொடிக்கு 11 கி.மீட்டரிலி ருந்து 70 கி.மீ. வரைகூட இருக்கும்.
விண்கல் என்பது சின்னப் பாறை போன்ற உலோகப் பொருளாகும். இது வான்வெளியில் பயணித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இவை அஸ்டி ராய்டுகளைவிட மிகச் சிறியவையே. இதன் அளவு என்பது ஒரு நெல் அளவி லிருந்து ஒரு மீட்டர் சைசில் உள்ள கல் போலவும் இருக்கலாம்.
ஒவ்வொரு நாளும் பூமியின் வளிமண்டலத்துக்குள் கோடிக்கணக் கான விண்கற்கள் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. விண் கற்கள் வளிமண்டலத்துக்குள் நுழை யும் போது, அது காற்றில் வேகமாக உரசி, எரிந்து காற்றாகி விடுகிறது. அப்போது வந்த வழியை வெளிச்ச மாக விட்டுச் செல்கிறது. விண்கற்கள் கூட்டமாக ஒரு இடத்திலிருந்து தொ டர்ந்து வந்து விழுந்து கொண்டிருப்ப தை நாம் விண்கற்கள் பொழிவு என அழைக்கிறோம்.
விண்கற்கள் பொழிவு என்பது இரவில் வானில் நிகழும் ஓர் அற்புத வானியல் நிகழ்வு. ஒருமுறை பொழிவைப் பார்த்தவர்கள், மீண்டும் அதைப் பார்க்காமல் இருக்க முடியாது. விண்கற்கள் பொழிவின் வண்ணங்களும், அதன் அழகும் நம்மை அதனை நோக்கி ஈர்க்கும். சுமாராக ஒவ்வொரு ஆண்டும், இந்த பூமியில் 15,000 டன் விண்கற்கள்/மைக்ரோ விண்கற்கள், வான் தூசு கள், பூமி மேலே பலப்பல வடிவங்க ளில், வண்ணங்களில் கொட்டிக் கொண் டேதான் இருக்கின்றன. அதற்கு காரணம், அந்தப் பாறைத் துகள்களிலுள்ள தனிமங்களின் வேதிப் பொருட்களே.
விண்கற்கள் விண்ணிலிருந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் வீழும் முன், அதற்கு விண்வீழ் என்று பெயர். எரிந்து விழும் விண்கல் எரிநட்சத்திரம் என்று அழைக்கப்படு கிறது. இது புவியின் வளிமண்டலத்தில் எரிந்து இல்லாமலே போய்விடுகிறது. ஒரு சில விண்கற்கள் எரிதலையும் தாண்டி, அரிதாக, சில சமயம் பூமியை வந்து சேருவதும் உண்டு. தரையில் வீழ்ந்த விண்கற்களை - இரும்பு விண் கற்கள், கல் விண்கற்கள் மற்றும் கல்லும் இரும்பும் இணைந்த விண்கற்கள் என 3 வகையாகப் பிரிக்கின்றனர்.
நாம் விண்கற்கள் பொழிவைப் பார்க்கும் போது, வண்ண வண்ண பட்டாசுகள், மத்தாப்புகளை வானில் சுழற்றி வீசுவது போலவே காட்சித் தரும். ஆண்டுக்கு 9 முறை விண் கற்கள் பொழிவு நிகழ்கிறது.
இன்று இரவு 10.30. மணிக்கு மேல், வடகிழக்கு வானில் சுமார் 50 டிகிரி உயரத்தில் தெரியும். ஆனால் பின்னிரவில் சுமார் 2 மணிக்கு மேல்தான் அதிகமான விண்கற்கள் கொட்டும். நீங்கள் வானின் இந்த வேடிக்கையை, விடிகாலை வரை பார்த்து மகிழலாம். மணிக்கு 50 விண்கற்கள் எரிந்து விழும்.
(இன்று - ஜூன் 30 விண்கல் தினம்)