எலி மருந்து சாப்பிட்டு குழந்தைபலி
கிருஷ்ணகிரி,நவ.27- மாதேப்பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வீட்டில் எலிகள் தொல்லை என்பதால் அதை கொல்வதற்கு வாங்கிய எலி மருந்தை வீட்டில் வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் இவரின் 2 வயது மகன் தஸ்வன் விளையாடிக் கொண்டி ருந்தபோது அங்கிருந்த எலிமருந்தை தின்பண்டம் என நினைத்து எடுத்து சாப்பிட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதனால் மயக்க மடைந்த குழந்தையை உடனடியாக மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்து வட்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக வியாழனன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளளார்.