சென்னை,பிப்.3- புயல் வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காமலும் ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய பாஜக அரசு, தனது இடைக்கால பட்ஜெட்டில் தமிழ் நாட்டை வஞ்சித்துள்ளதை கண் டித்து பிப்ரவரி 8 ஆம் தேதி தில்லி யில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திமுக சார்பில் நடைபெறும் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி களின் எம்பிக்களும் கலந்து கொள் ளுமாறு டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக நாடாளு மன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசின் இடைக் கால நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ள நிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஓரவஞ்சனை கண்டித்து திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச் சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக் கிணங்க, பிப்ரவரி 8 அன்று காலை 10 மணிக்கு திமுக சார்பில் தில்லி யில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள் ளார்.