tamilnadu

img

சென்னை புத்தகக் காட்சி இன்று நிறைவு!

சென்னை,ஜன.20- பலதரப்பட்ட புத்தகங் கள் ஒரே இடத்தில் கிடைக் கும் புத்தக கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகள், நாவல் கள், இலக்கியம் சார்ந்த  நூல்கள், ஆங்கில புத்தகங் கள், வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் என பொக்கிஷ குவியல்கள் போல புத்தகங்கள் ஒரே  இடத்தில் குவிந்து கிடக்கும்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அந்த வகையில் சென்னை புத்தக கண்காட்சியும் மக்களிடம் நல்ல வரவேற்பையும், ஆதரவையும் பெற்றுள்ளது.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு லட்சக் கணக்கான மக்கள் வருகை புரிந்து ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாங்கி செல்வார்கள். சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலத்தை சேர்ந்த புத்தக பிரியர்க ளுக்கு ஒவ்வொரு ஆண்டும்  சென்னையில் எப்போது புத்தக கண்காட்சி தொடங் கும் என ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள். இங்கு கிடைக்கும் புத்தகங்கள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்கப்படுவதால் புத்தக  விரும்பிகள் இந்த கண்காட் சியை தவறவிடுவதில்லை.

இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான சென்னை புத்தக கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் பபாசியின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் புதன்கிழமை (ஜனவரி 6) தொடங்கியது. ஜனவரி 21 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்தக் கண்காட்சியில் ஆயிரம் அரங்குகள், லட்சத் திற்கும் அதிகமான புத்த கங்கள் இடம் பெற்றன. தினமும் பல்வேறு பதிப் பகங்களில் முன்னணி எழுத்தாளர்கள் அமர்ந்து கையெழுத்திட்ட பிரதிகளை  வழங்குவதும், வாசகர் களைச் சந்திப்பதும் இலக்கிய மணம் கமழ்ந் தது. ஒவ்வொரு நாள் மாலை யிலும், தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரை இடம் பெற்றது. தினமும் புத்தகம் வெளியிடப்பட்டது.