இதயம் துடித்துக்கொண்டிருக்கும்போதே 92 வயது மருத்துவருக்கு அறுவைசிகிச்சை
சென்னை, மே15- இதயத்தில் அடைப்பு கள் இருந்த 92 வயது நோயாளிக்கு ஒரே நேரத்தில் இதய துடிப்பை நிறுத்தாமல் நான்கு ரத்தக் குழாய்களில் பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை சென்னை வட பழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் வெற்றி கரமாக செய்யப்பட்டுள்ளது. நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போது 92 வயதைக் கடந்தவர்களும் இந்த சிகிச்சையின் மூலம் பயனடையலாம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. எவ்வித சிக்கலுமின்றி நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையை தொடர்ந்து, ஏழு நாட்களுக்குப் பின்னர் அந்த நோயாளி மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த நோயாளி ஒரு மருத்துவர். சென்னை மருத்துவக்கல்லூரியில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது ரத்தக்குழாயில் அதிகப்படியான கால்சியம் படிந்திருந்தகாரணத்தால் அதையும் சமாளித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியி ருந்தது என்று சிம்ஸ் மருத்துவமனையின் இருதய மற்றும் பெருநாடி நோய சிகிச்சை பிரிவின் இயக்குநர் டாக்டர் பாஷி கூறினார். வெளிநாடுகளில் இதயம் மற்றும் நுரையீரல் இயந்தி ரத்தின் உதவியோடு அறுவை சிகிச்சை செய்வார் கள். ஆனால் இந்தியாவில் இயந்திரத்தின் உதவி யில்லாமல் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது. இது செலவு குறைவானது என்றும் அவர் கூறினார். நாட்டில் 92 வயதான ஒரு நோயாளிக்கு இத்தகைய சிகிச்சை செயல்முறை செய்யப்பட்டிருப்பது இதுவே அநேகமாக முதன் முறையாக இருக்கலாம் என்றும் டாக்டர் பாஷி தெரி வித்தார். 45 ஆண்டுகாலம் செழுமையான அனுப வத்தைக் கொண்டுள்ள டாக்டர் பாஷி இதுவரை 20,000 க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். மன உறுதியோடு இருக்கும் மூத்த குடிமக்களுக்கு இத்தகைய அறுவை சிகிச்சைகளை எளிதாக செய்து முடிக்க முடியும் என்று நோயாளியும் மருத்துவருமான கூறினார்.