tamilnadu

img

தமிழகத்தில் 9 புதிய மேம்பாலங்கள் திறப்பு...

சென்னை
தமிழ்நாட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு குறைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 6 இரயில்வே மேம்பாலங்கள், ஒரு இரயில்வே கீழ்ப்பாலம், ஒரு உயர்மட்டப் பாலம் மற்றும் ஒரு பல்வழிச் சாலை மேம்பாலம் ஆகிய 9 பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.

1.ரயில்வே மேம்பாலம் : காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை- பொன்னேரிக்கரை - காஞ்சிபுரம் சாலை: இரயில்வே கடவு எண் 29-க்கு மாற்றாக 59 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில்

2.பல்வழிச்சாலை மேம்பாலம் : மதுரை மாவட்டம், மதுரை - தொண்டி சாலை மற்றும் மதுரை சுற்றுச் சாலை சந்திப்பில் 53 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில்

3.இரயில்வே மேம்பாலம் : கோவை மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில், இரயில்வே கடவு எண் 122-க்கு மாற்றாக பொள்ளாச்சி கிணத்துக்கடவு இரயில் நிலையங்களுக்கு இடையே 48 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில்

4.இரயில்வே மேம்பாலம் : திருவண்ணாமலை மாவட்டம், பாண்டி - கிருஷ்ணகிரி சாலை இரயில்வே கடவு எண்.55-க்கு மாற்றாக தண்டரை - திருவண்ணாமலை இரயில் நிலையங்களுக்கு இடையே 38 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில்

5.இரயில்வே மேம்பாலம் : செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி இரயில் நிலையங்களுக்கு இடையே கடவு எண் 36-க்கு மாற்றாக ஊரப்பாக்கம் சாலையில், 34 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில்

6.இரயில்வே மேம்பாலம் : விழுப்புரம் மாவட்டம், கடலூர் - சித்தூர் சாலையில், இரயில்வே கடவு எண்.144-க்கு மாற்றாக 22 கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில்

7.உயர்மட்டப் பாலம் :  வேலூர் மாவட்டம், காட்பாடி - குடியாத்தம் சாலையிலிருந்து விரிஞ்சிபுரம் செல்லும் சாலையில், லத்தேரி மற்றும் விரிஞ்சிபுரம் இரயில்வே நிலையங்களுக்கு இடையே உள்ள கடவு எண் 59-க்கு மாற்றாக 22 கோடியே 26 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள (இரயில்வே மேம்பாலம்)

8.உயர்மட்டப் பாலம் : திருவண்ணாமலை மாவட்டம், தண்டரை - எரையூர் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே 17 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில்

9.இரயில்வே கீழ்ப்பாலம் : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி - ஏர்வாடி - வள்ளியூர் - விஜயாபதி சாலையில் இரயில்வே கடவு எண்.82பி-க்கு மாற்றாக 14 கோடியே 52 இலட்சம் ரூபாய் செலவில் என மொத்தம் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒன்பது பாலங்களை முதல்வர் முக ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

;