tamilnadu

img

ஒத்திவைக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு  

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தனித்தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்றுதேதிகள் பின்னர் வெளியிடப்படும் என தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்திருந்தது. இதனையடுத்து, தனித்தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முழுமையாக ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா கடந்த மாதம் அறிவித்தார்.

இந்த நிலையில் தனித்தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுகள் இயக்குநரகம் இன்று அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை வரும் டிச.14 ஆம் தேதிமுதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. 

;