சென்னை, மார்ச் 11- மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்)-யின் 81வது ஆண்டு தினம் மார்ச் 19 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி சென்னை ஆவடியில் உள்ள சிஆர்பி எஃப் படைப்பிரிவு மையம், தமிழ்நாடு அரசு காவல் துறை யுடன் இணைந்து பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் மினி மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் போட்டியில் 500க்கும் அதிகமானோர் பங்கேற்ற னர். இதில் பால்சிங் நாக் முதல் பரிசு பெற்றார். லக்மு ராம் இரண்டாவது பரிசை யும், மட்காம் ஷிவ்நாத் மூன்றாவது பரிசையும் பெற்றனர். ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் பிரிவின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சோனல் வி.மிஸ்ரா நிகழ்ச் சிக்கு தலைமை தாங்கினார்.