பெரம்பூரில் ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) 1955 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பின்னர் நேற்றுடன் 75 ஆயிரம் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்துள்ளது. 75 ஆயிரமாவது ரயில் பெட்டியை ஐசிஎப் பொது மேலாளர் சுப்பாராவ் பார்வையிட்டார். இதற்காக நடைபெற்ற விழாவில் அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்றனர்.