tamilnadu

70 சவரன் நகை கொள்ளை

தாம்பரம்,டிச.7- தாம்பரம் கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் முருகன் (36). மென்பொருள் பொறியாளர். இவரது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு குடும்பத்துடன் சென்றார். பக்கத்தில் உள்ள வீட்டுக்காரரிடம் தகவல் சொல்லிவிட்டு வீட்டை பூட்டி சென்றார்.  இந்நிலையில் அவரது வீட்டின், பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் தகவல் தெரிவித்தார். உடனே முருகன் அவசரமாக வீடு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவும் உடை க்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் நகை கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது.வெள்ளி பொருட்கள், லேப்டாப் போன்றவையும் கொள்ளை போயிருந்தன.  இதுபற்றி முருகன் தாம்பரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்து  காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.