tamilnadu

பல்கலைக்கழகங்களில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேட்டி

சென்னை,ஜூன் 14 தமிழகத்தில் உள்ள பல்கலை கழ கங்களில்  69 விழுக்காடு  இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை  தலைமைச் செயல கத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பல்கலைக்கழகங்களில் உயிரி தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், மற்ற படிப்புகளுக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சரியாக செயல்படுத்த சுற்றறிக்கை அனுப்பப்படும். இட ஒதுக் கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். தவறு கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இடஒதுக்கீட்டை எல்லா இடங்களிலும், கல்வி நிலையங்களில் மட்டுமல்ல, வேலைவாய்ப்பிலும் பெறுவதற்காக குழுவை முதலமைச்சர் அமைத்துள் ளார். தமிழ்நாட்டில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறையே தான் பின்பற்றப் படும். பொருளாதாரத்தில் நலிவடைந் தோருக்கான இட ஒதுக்கீடு கடந்த ஆண்டே நிறுத்தப்பட்டுவிட்டது. சமூக நீதிக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்ப டாது. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் எம்எஸ்சி உயிரி தொழில் நுட்ப படிப்பில் தமிழ்நாட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இந்த ஆண்டு கல்லூரிகளில் முழுப் பாடத்திட்டமும் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் 2022-23-ம் ஆண்டிற்கான முதுகலை (எம்.எஸ்சி,) உயிரி தொழில்நுட்பவியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு அண்மை யில் வெளியிடப்பட்டது. மொத்தம் 30 இடங்கள் மட்டுமே உள்ள இப்படிப் பிற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டி ருந்தது. மேலும், விண்ணப்பத்தின் கீழ் பகுதியில், பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கான 10விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.