மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை
வழங்காமல் 6 மாதம் அலைக்கழிப்பு
மாற்றுதிறனாளி மகனுக்கு 6 மாத மாக உதவி தொகை வரவில்லை என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று தாய் ஒருவர் மனு அளித்தார். விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகே உள்ள மேல்காரணை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி காளியம்மாள் என்பவர் தனது மகன் கோவிந்தன் (வயது 25) மாற்றுத் திறனாளியான அவருக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை கடந்த ஆறு மாதமாக வரவில்லை. இது குறித்து மாற்றுத் திறனாளி அலுவலகத்தில் காரணம் கேட்ட போது, உங்களது மகன் இறந்து விட்டான் அதனை மறைத்து ஏமாற்றி தான் நீங்கள் உதவித்தொகையை வாங்கி இருக்கிறீர்கள் என்று கூறியதாக தெரிகிறது. உயிரோடு இருக்கும் எனதுமகனுக்கு தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை கிடைக்காத தால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் வறுமையின் பிடியில் மாற்றுத்திறனாளி மகனை வைத்துக்கொண்டு வேதனைப்படு வதாகவும் அவரது தாயார் கண்ணீர் மல்க கூறினார். மேலும் மகன் இறந்துபோனதாக கூறி உதவித்தொகையை நிறுத்தி அலை கழிக்கும் நிலையில் உயிரோடு இருக்கும் அந்த மாற்றுத்திறனாளி மகனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தூக்கிக்கொண்டு வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்நிகழ்வு விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக பொதுமக்கள் விமர்சித்தனர்.