tamilnadu

சாலை விபத்துகளில் 6 பேர் பலி

சென்னை,ஜன.1- புளியந்தோப்பு பழைய போகிபாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராமலிங்கம் (40). இவர் செவ்வாயன்று இரவு இரு சக்கர வாகனத்தில்  வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். புழல் சிறை எதிரே வந்த போது, இவரின் பின்னால் வந்த லாரி மோதியதில் ராம லிங்கம் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். செங்குன்றம் எம்.ஏ. நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமார் (31). தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் தொழில் செய்யும் இவர்,  நள்ளிரவு 2 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கதிர்வேடு சிக்னலில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இவர் உயிரிழந்தார். இந்த இரண்டு விபத்துக்கள் குறித்தும் மாதவரம் போக்கு வரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். எண்ணூர் குப்பம் 5-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் (48). இவர் தாளாங்குப்பம் கடற்கரையை யொட்டிய சாலையில்  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே புல்லட் மோதியதில் சுந்தர் உயிரிழந்தார்.  அதோ போல் புல்லட்டை ஓட்டி வந்த ஆகாஷ் பலத்த காயத்துடன் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒடிசாவைச் சேர்ந்த முகமது மோதின் (45) பூந்தமல்லி அருகே உள்ள செந்நீர் குப்பத்தில் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். சைக்கிளில் சென்ற இவர் மீது  ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி புதனன்று (ஜன.1) உயிரிழந்தார். காஞ்சிபுரம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் விக்னேஷ்ஷா (24) சங்கர் ஷா (26), இருவரும் காஞ்சி புரத்தில் இரவு புத்தாண்டு கொண்டாடினர். பின்னர் அதிகாலை 3 மணியளவில் சென்னையில் புத்தாண்டை கொண்டாட காரில் 6  பேர் புறப்பட்டு வந்துள்ளனர். பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது இருங்காட்டுக் கோட்டையில் லாரி மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ் ஷா, சங்கர் ஷா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்துகள் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

;