tamilnadu

img

கிருஷ்ணகிரி அருகே பேருந்து மீது கார் மோதி விபத்து - 6 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த 8 பேர் பெங்களூரிலுள்ள ஒன்டர்லாவிற்கு ஆம்னி கார் மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே கார் வந்துகொண்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலை ஓரம் நின்ற அரசுப் பேருந்தில் இருந்து இறங்கிய தேவராஜ் என்பவர் சாலையைக் கடக்க முயன்றார். எதிர்பாராத விதமாக கார் அவர் மீது மோதியது. மேலும், ஆம்னி கார் கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற தேவராஜ், காரில் சென்ற பிரசாந்த், சிவக்குமார். லிங்கா, சுரேந்தர் ஓட்டுநர் பூபதி ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;