tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,995 பேருக்கு கொரோனா தொற்று...  

சென்னை 
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் உச்சநிலையில் உள்ளது. குறிப்பாக இன்னும் கொரோனா என்னவென்று அறியாத கிராம பகுதிகளில் கூட வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக மக்கள் நாள்தோறும் கொரோனா என்னும் ஆயுதத்தை நினைத்து நடுங்கி வாழ்கிறார்கள். 

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,995 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3,67,430 ஆக உயர்ந்துள்ளது. இன்று (ஆக., 21) ஒரே நாளில் 101 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,340 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோயாளிகளாக இருந்த 5,764 பேர் இன்று குணமடைந்த நிலையில், மாநிலத்தில் கொரோனவை வென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 3,07,677 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 53,413 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

இன்றைய தமிழக கொரோனா பாதிப்பில் 32 பேர் மாநிலத்தின் வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.     

சென்னையில் இன்று - 1,282 பேருக்கு பாதிப்பு...  

;