tamilnadu

img

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று...  மேலும் 120 பேர் பலி...   

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் விகிதம் மாற்றமில்லாமல் தொடர்ந்து ஏறுவரிசையில் பயணித்து வருகிறது. தினசரி பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வான நிலையில் இருப்பதால் மக்களை கடும் அதிர்ச்சியில் உள்ளனர். 

இந்நிலையில், தமிழகத்தில் இன்று (ஆக.17) புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3,43,945 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 120 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாநிலத்தின் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,886 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருந்த 5,667 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 2,83,837 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இன்னும் 54,122 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   

;