tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று... 117 பேர் பலி... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் வித்தியாசமான வேகத்தில் அதாவது கணிக்க முடியாத அளவிற்கு உள்ளது. நாள்தோறும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி மக்கள் அறிந்த விஷயம் தான் என்றாலும், கடந்த சில நாட்களாக உயிரிழப்பும் மின்னல் வேகத்தில் உள்ளது.  இதனால் மக்கள் இயல்பு நிலையை மறந்து வாழ்க்கை என்னும் வண்டியை ஒருவித நடுக்கத்துடன் நகர்த்தி வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 3,26,245 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று (வெள்ளி) ஒரே நாளில் 117 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,514 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருந்த 5,556 பேர் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,67,015 ஆக உயர்ந்துள்ளது. 

இன்னும் 53,716 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பில் 28 பேர் மாநிலத்தின் வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

;