கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் 500 கனஅடி நீர்திறப்பு
சென்னை, மே 6- ஆந்திராவில் நடந்த கால்வாய் பணி நிறைவடைந்ததையடுத்து, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லைக்கு 3 அல்லது 4 நாளில் வந்தடையும் என அதிகாரி கள் தெரிவித்தனர். சென்னை மக்க ளுக்கு மேற்பரப்பு நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர், கடல்நீரை குடி நீராக்கும் திட்டங்கள் ஆகியவை மூலம் குடிநீர் பெறப்படுகிறது. குறிப்பாக புழல் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றிலும், கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியில் இருந்தும் சென்னைக்கு குடிநீர் பெறப்படுகிறது. இவற்றின் மொத்த கொள்ளளவு 12,722 மில்லியன் கன அடி ஆகும். கண்டலேறு அணையில் கூடுத லாக 300 கன அடி வீதம் 800 கன அடியாகவும், பின்னர் படிப்படி யாக உயர்த்தி தற்போது 1340 கன அடியாகவும் நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லை யான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 316 கன அடியாகவும் அதிகரித்து வந்து கொண்டிருந்தது. கடந்த மாதம் 27ம் தேதி ஆந்திர பகுதியில் கால்வாய் பணிகள் நடந்ததால் தற்காலிகமாக தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதுவரை பூண்டி ஏரிக்கு 500 மில்லியன் கன அடி (அரை டிஎம்சி) தண்ணீர் கிடைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், கால்வாய் பணிகள் நிறைவு பெற்றதால், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திங்களன்று பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லைக்கு 3 அல்லது 4 நாளில் வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.