tamilnadu

பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு

சென்னை, ஜுன் 3-உள்ளாட்சி அமைப்பு களுக்கு 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப் படும் என்று தமிழ்நாடு மாநிலதேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.  ஆனால்,இந்த அறிவிப்பில் உரியஇடஒதுக்கீடு வழங்கப்பட வில்லை என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.இதை விசாரித்த நீதி மன்றம் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த இரு ஆண்டுகளாகத் தேர்தலை நடத்தாமல் திட்டமிட்டு இழுத் தடித்து வருகிறது தமிழக அரசு. இந்நிலையில் இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர் தலை நடத்த தேர்தல் ஆணையம் ‘தீவிரம்’ காட்டி வருகிறது. ஆகஸ்ட் இறுதி வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திங்களன்று (ஜூன் 3) உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீ ட்டுப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், உள்ளாட்சித் தேர்த லில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட வர்கள் மற்றும் பழங்குடி யினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தஒதுக்கீடானது, 10 ஆண்டு களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது. சென்னையில் 200 வார்டுகளில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோன்று சேலத்தில் 60 வார்களில் 30 வார்டுகள்பெண்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன.