tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகித ஊதிய உயர்வு: போக்குவரத்து துறை அமைச்சர்  

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகித ஊதிய உயர்வு வழங்க தயாராக உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்றபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், 'பெண்கள் இலவசமாக பயணிக்கின்ற காரணத்தினால் அவர்களுடைய எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பேட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதையும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.    

தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. அதில் சங்கங்களின் சார்பில் 8 சதவிகித ஊதிய உயர்வு வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து 5 சதவிகித ஊதிய உயர்வு வழங்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.