சென்னை, மே 30 - சென்னையில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக் கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவ மனை, ஸ்டான்லி அரசு மருத் துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனா சிகிச்சையில் இருக்கும்போது தப்பித்து செல்வது வாடிக்கையாகி வருகிறது. பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 57 வயது நபருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சனிக்கிழ மையன்று (மே 30) அவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதேபோன்று சேத்துப் பட்டை சேர்ந்த 63 வயது ஆண் நோயாளி தப்பி ஓடி விட்டார். இவர்களை சுகா தாரதுறை அதிகாரிகள் மற்றும் போலீசார்கள் தீவிர மாக தேடி வருகின்றனர். இதற்கு முன்பாக கடந்த 7ந் தேதி 62 வயதான பள்ளிக் கரணையை சேர்ந்த நபரும், 15ம் தேதி கோயம்பேடு சின்மையா நகரைச் சேர்ந்த 43 வயதான நபரும், 22ம் தேதி அயனாவரத்தைச் சேர்ந்த 51 வயது நபரும் தப்பின் சென்றது குறிப்பிடத் தக்கது.