tamilnadu

5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை: எ.வ.வேலு தகவல்....

சென்னை:
சென்னையை சுற்றியுள்ள 5 சுங்கச் சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் துறையின் மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய திருவையாறு திமுக உறுப்பினர் துரை.சந்திரசேகர்,“ சுங்கச் சாவடிகளை ஒவ்வொரு முறை கடக்கும்போது நீண்ட நேரம் ஆகிறது. பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் என்பதை போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளை அகற்றி பயணிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.இதற்கு பதில் அளித்த பேசியநெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, “சுங்கச் சாவடிகளை கடப்பதற்கு அமைச்சராகிய எனக்கே பல நிமிடங்கள் ஆகிறது. தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச் சாவடிகளில் பெரும்பாலானவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.சென்னையைச் சுற்றி நீண்ட காலமாக நகர்ப்புற பகுதிகளில் இருக்கக்கூடிய சென்ன சமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு, செங்கற்பட்டு அருகே உள்ள பரனூர் ஆகிய ஐந்து சுங்கச்சாவடிகளை அகற்ற ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். இந்த கூட்டத் தொடர் முடிந்த பிறகு தில்லிக்கு சென்று ஒன்றிய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

;