சென்னை,நவ.6- லிப்ட் தயாரிப்பு நிறுவன மான கோனே, தமிழகத்தில் அதன் புதிய உற்பத்தி ஆலையை நேற்று திறந்துள்ளது. ரூ.450 கோடி முதலீட்டில் 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆசியப் பகுதியிலேயே மிகப் பெரிய ஆலையாக இது நிறுவப்பட்டுள்ளது. பின்லாந்தை தலைமையிட மாகக் கொண்ட கோனே நிறுவனம், 1984ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் சென்னையை தலைமையிட மாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், வங்க தேசம், இலங்கை,பூடான், நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுக்கு லிப்டுகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் அதன் புதிய உற்பத்தி ஆலையை திறந்துள்ளது. இதன் திறப்பு விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோ`ஹித், பின்லாந்து நாட்டின் வெளி யுறவுத் துறை அமைச்சர் ஹெச்.இ. பெக்கா ஹாவிஸ்டா, தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில், இந்தியாவின் வளர்ச்சிக்கு நிறுவனங்களின் முதலீடுகள் மிக அவசியம். அந்த வகையில் கோனே நிறுவனத்தின் இந்த புதிய முதலீடு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். இந்நிறுவனம் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால் தமிழகம் பெருமளவில் பயன்பெறும்’ என்று தெரி வித்தார். பின்லாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெச். இ.பெக்கா ஹாவிஸ்டா பேசுகையில், இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவும் பின்லாந்தும் வலுவான வர்த்தக உறவை கொண்டி ருக்கின்றன. இந்த புதிய முதலீடு மூலம் அந்த உறவு மேலும் வலுப்பெறும் என்று கூறினார். தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், தொழில் கட்ட மைப்பில் இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. கடந்தசில ஆண்டுகளில் பல்வேறு புதிய முதலீடுகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அந்த வகை யில் கோனே நிறுவனத்தின் இந்த புதிய ஆலை தமிழக வளர்ச்சிக்கு பங்களிக்கக் கூடியதாக அமையும் என்றார்.