tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா....

சென்னை
இந்தியாவின் புதிய கொரோனா மையமாக மாறியுள்ள தமிழகத்தில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. கடந்த ஒருவார காலமாக தினமும் 600-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது. குறிப்பாக தலைநகர் மண்டலமான சென்னை அதிக சேதாரத்தை சந்தித்தது. தமிழகத்தில் இதுவரை ஏற்பட்ட பாதிப்பு விகிதத்தில் சென்னை மட்டும் 50 சதவீத பங்கு வகித்தது. 

இந்நிலையில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதரரத்துறை அமைச்சர்   சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அதிகபட்சமாக சென்னையில் 363 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9674-ஆக உயர்ந்துள்ளது.

;