சென்னை, ஏப்.5- தமிழகத்தில் வெள்ளியன்று 44 இடங்க ளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை விரு கம்பாக்கம் ரத்னா நகரில் உள்ள ஒரு வீடு, ஈரோடு பழையபாளையத்தில் உள்ள தனி யார் கட்டுமான நிறுவனம், திருப்பூர் அவி நாசியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் ‘அ’ பிரிவு, ஒப்பந்ததாரர் வேலுமணி என்பவ ரின் வீடுகள், பெட்ரோல் பங்க், ஆர்.ஓ. வாட்டர் நிறுவனம், திருநெல்வேலி சாலை பணி ஒப்பந்ததாரரும், அதிமுக பிரமுகரு மான ஆர்.எஸ். முருகன் வீடு மற்றும் அலு வலகம் என சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு உள்ளது.