tamilnadu

4 தனியார் மருத்துவமனைகளை தற்காலிகமாக தமிழக அரசு கையகப்படுத்தப்படுகிறது

சென்னை, ஜூன் 8 - தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகளில் அனைத்து  படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இந்த நிலையில்,  சுகாதாரத்துறை தனியார் வசமுள்ள மருத்துவ மனைகளை தற்காலிகமாக கையகப்படுத்துகிறது. அதன்படி, பெசன்ட் நகரில் இயங்காமல் உள்ள தனியார் மருத்துவமனை, வளசரவாகத்தில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனை, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான மருத்துவமனையின் ஐந்தாவது, ஆறாவது மாடியை யும் அரசு கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற நடவ டிக்கை எடுக்கப்படுகின்றது. இந்த சிறப்பு மருத்துவமனைகளில் பணியாற்ற 1500 மருத்துவர்களும், அட்சோர்சிங் முறையில் 600  செவிலியர்கள் மற்றும் 350 ஆய்வக பணியாளர்களை யும் பணி நியமனம் செய்ய சுகாதாரத்துறை திட்ட மிட்டுள்ளது.

;