சென்னை, ஜுன் 4-தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசுஉத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன், தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரைக்கு புதிய ஆட்சியர் நியமிக்கப்படும் வரை மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தகுமார், மதுரை மாவட்ட பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி, கூடுதல் பொதுப்பணித்துறை செயலாளராகவும், மற்றொரு கூடுதல் தலைமை தேர்தல்அதிகாரி ராஜாராம், நகர திட்டமிடல் இயக்குநராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.