tamilnadu

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....

சென்னை:
தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக  செப்.13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஓரிரு உள் மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் 15.09.2021: நீலகிரி, கோவை தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், கடலோர மாவட்டங்கள்,  வட உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

;