tamilnadu

img

தி.மலையில்  3020 பேர் நீட் தேர்வு எழுதினர்

தி.மலையில்  3020 பேர் நீட் தேர்வு எழுதினர்

திருவண்ணாமலை,மே 4-  திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி, அரசு பெண்கள் மேல்நிலைப்  பள்ளி, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி, சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 6 மையங்களில் 3020 மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதினர். தேர்வு எழுதக்கூடிய மாணவிகள் காதுகளில் கம்மல் ஏதும் அணியாமல், ஜடை ஏதும் போடாத நிலை யில் தேர்வு மையங்க ளுக்குள் அனுமதிக்கப்பட்ட னர். மாணவர்கள் பெல்ட் அணியாமலும், வெள்ளி அரைஞாண் கயிறு உள்ளதா? என சோதனை செய்து அனுமதித்தனர். இதில் திருவண்ணாமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர், இடையில் வெள்ளி அரைஞான் கயிறு அணிந்து இருந்ததால், அவரை தேர்வு எழுத தேர்வு பொறுப்பாளர்கள் அனுமதிக்கவில்லை.இதை யடுத்து அந்த மாண வரின் பெற்றோர், மாண வர் அணிந்திருந்த அரை ஞாண் கயிறை அகற்றியதற்கு பின்னர் தேர்வு எழுத அனு மதிக்கப்பட்டார்.