சென்னை, ஜூலை 4 - இந்த நிதியாண்டில் 10 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்பு களும், தட்கல் முறையில் 20 ஆயி ரம் இணைப்புகளும் வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார். பேரவையில் வியாழனன்று (ஜூலை 4) மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியத்தின் மீது திமுக உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், தமிழ கம் மின்மிகை மாநிலமாக உள்ளது என்றால் 2000ஆவது ஆண்டி லிருந்து பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்காதது ஏன்? தட்கல் முறையில் பணம் செலுத்தியவர்க ளுக்கு ஓராண்டாக இணைப்பு வழங்காதது ஏன்? என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர் மேற்கண்ட வாறு கூறினார். இதனைத் தொடர்ந்து நடை பெற்ற விவாதம் வருமாறு:
உறுப்பினர்: மின்வாரியத்தில் 40 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதை எப்போது நிரப்புவீர்கள்? கஜா புயல் பாதிப்பின்போது பணியாற்றிய 10ஆயிரம் பேருக்கு கேங்மேன் பதவி வழங்கப்படுமா?
அமைச்சர்: கேங்மேன் பணிக்கு 5 ஆயிரம் பேரை எடுக்க உள்ளோம். கஜா புயலில் பணியாற்றிய 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதி தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு திறந்தமனதோடு, விருப்புவெறுப்பின்றி பணி வழங்கப்படும்.
உறுப்பினர்: தமிழக மின்வாரியத்தில் வட இந்தியர்களுக்கு என்ன வேலை? அவர்களை எப்படி பணியமர்த்தலாம்?
அமைச்சர்: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு பணி யிடங்களில் அனைத்து மாநிலத்தவ ரையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி உதவி பொறியாளராக 38 பேர் தேர்ந்தெடுக் கப்பட்டனர். அதில் பெரும்பகுதியி னர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வர்கள். தமிழர்களுக்கு பணி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அரசு தலைமை வழக்கறிஞ ரிடம் கருத்து கேட்டுள்ளோம்.
உறுப்பினர்: திருச்சியில் பல மடங்கு சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: சொத்து வரியை மாற்றி அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டது. கட்டண உயர்வு குறித்து முதலமைச்சருக்கும், துறைக்கும் புகார்கள் வந்துள்ளன. கட்டணத்தை குறைப்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.