உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரமும், நிதியும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில், உள்ளாட்சித்துறை அமைச்சரைச் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவின் சுருக்கம் வருமாறு:
18 அதிகாரங்களை உறுதி செய்ய வேண்டும்!
அரசியலமைப்புச் சட்டத்தின் 73-ஆவது, 74-ஆவது அரசியல் சட்ட திருத்தங்களின் அடிப்படையில் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு 29 வகை அதிகாரங்களும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 18 வகை அதிகாரங்களும் உறுதி செய்யப்பட வேண்டும்.
மன்றக் கூட்டங்களை ஜனநாயக நெறி முறைப்படி அனைத்து பிரதிநிதிகளும் விவாதிக்கும் வகையில் நடத்த வேண்டும். சொத்து வரி, தொழில் உரிமக் கட்டணம், கட்டட அனுமதிக் கட்டணம், அபராதம் வசூலித்தல் போன்றவைகளின் கட்டண உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
தொகுப்பூதியர்களை பணிநிரந்தரப்படுத்த வேண்டும்!
மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து நகர்ப் புறங்களிலும் பாதாளச் சாக்கடை அமைத்திட வேண்டும். சிக்கன நடவடிக்கை என்ற பெய ரில் கடை நிலைப்பணிகள், தூய்மைப் பணி களைத் தனியாருக்கு கொடுப்பதை நிறுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒப்பந்த ஊழியர்கள், தொகுப்பூதிய ஊழி யர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்யவேண்டும்.
மாநகராட்சிப் பள்ளிகளை மூடுவதை கைவிட வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர ஆசிரியர் நியமனம் மூலம் நிரப்ப வேண்டும். பள்ளிகளுக்குத் தேவையான வகுப்பறைகள், விளையாட்டுத் திடல், குடிநீர், கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். பள்ளிகளில் மாண வர்களின் வருகையை அதிகரிக்க விழிப்புணர்வுப் பிரச்சாரம் மற்றும் பள்ளியின் கற்பித்தல் திறனை உயர்த்த வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணிநேரமும் இயக்க வேண்டும்!
சாலையோர விற்பனையாளர்கள் பாது காப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டப்படி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். விற்பனைக்குழு அமைக்காத நகரங்களில் விற்பனைக்குழு அமைக்க வேண்டும். முன்ன றிவிப்பின்றி வியாபாரிகளை அகற்றுவதை நிறுத்த வேண்டும். மாற்று இடங்களை உறுதி செய்யாமல் வியாபாரிகளை அகற்றக் கூடாது. உட்புறச் சாலைகள், நெடுஞ்சாலை கள், அணுகுசாலைகளைத் தரமாக அமைத்திட வேண்டும்.
அரசு பொது மருத்துவமனைகள், நகர்ப்புற மருத்துவமனைகள் நவீன தொழில்நுட்ப கருவிகள், தொழில்நுட்ப பயிற்சி பெற்ற ஊழியர்கள், சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாய்சேய் நல மையங்களில் 24 மணிநேரமும் மருத்துவர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மறுகுடியமர்த்தல் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்!
அரசு நிலங்கள், கிராம நத்தம், அனாதீனம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளான மின் இணைப்பு, குடி நீர் மற்றும் கழிவுநீர் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க மறுக்கக் கூடாது. நீண்டகாலமாக குடியிருப்புகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாக மறுகுடியமர்த்தல் கொள்கை இருக்க வேண்டும்.
பட்டியலின பிரதிநிதிகள் முழு சுதந்திரத்து டன் செயல்படும் சூழலை உருவாக்கிட வேண்டும். வார்டு சபைகள் செயல்பாட்டை மேம்படுத்திட வேண்டும். திட்ட அனுமதி (பிளான் அப்ரூவல்) நடைமுறைகளுக்கான கட்டண உயர்வுகளை குறைக்க வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் விரிவுப்படுத்தப்பட வேண்டும்
மத்தியில் கூட்டாட்சி !
மாநிலத்தில் சுயாட்சி!! உள்ளாட்சியில் தன்னாட்சி !!!
உள்ளாட்சிகளுக்கு மாநில அரசின் நிதி ஒதுக்கீடு 10 விழுக்காடு என்பதை 30 விழுக்காடாக உயர்த்த வேண்டும். கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான அதிகா ரங்களை உறுதிப்படுத்தும் ‘உள் சுயாட்சி அரசுப் பட்டியல்’ அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கிராம உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளின் வார்டுகளாக மாற்றுவதற்கு முன் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளின் கிராம சபை அனுமதி பெறுவதை கட்டாயமாக்க வேண்டும். ஊராட்சிச் செயலாளர்கள், ஊராட்சி மன்றத்திற்கு பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள் என்ற வரன்முறை உருவாக்கப் பட வேண்டும்.
ரூ. 10 லட்சம் வரை செலவிட ஊராட்சிக்கு அதிகாரம்!
கிராம ஊராட்சி பொது நிதியின் கீழ் செயல் படுத்தப்படும் பணிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கிராம ஊராட்சியே அனுமதி வழங்கும் அதிகாரம் வேண்டும். மத்திய நிதி ஆணைய நிதி, மாநில நிதி ஆணைய நிதி மாநில கருவூலத்திலிருந்து நேரடியாக சம்பந்தப் பட்ட உள்ளாட்சிகளுக்கு விடுவிக்கப்பட வேண்டும். உள்ளாட்சி பணிகளுக்கு ஒதுக்கப் படும் தொகைக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்கு வேலை உத்தரவு வழங்கும் அதி காரம் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும். கனிமவளத்துறை மூலம் வழங்க வேண்டிய பங்கு தொகைகளை நேரடியாக ஊராட்சிக்கு வழங்க உத்தரவிட வேண்டும். ஆன்லைன் மூலம் வரி செலுத்துவதில் நீடித்து வரும் குளறுபடிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை பதவி நீக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக ஒரு கமிட்டி யின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு முடி வெடுக்கும் வகையில் மாற்றப்பட வேண்டும். ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.