tamilnadu

img

சென்னை மாநகரில் 30 புதிய பூங்காக்கள்”

சென்னை மாநகரில் 30 புதிய பூங்காக்கள்”

சென்னை மாநகராட்சியில் 30 பூங்காக்கள் புதிதாக துவங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரி வித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாயன்று (மார்ச்25) நகராட்சி நிர்வாகத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகராட்சிக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, ரூ.75 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தின் கீழ், பேருந்து தட சாலைகளில் 200 கி.மீ நீளத்திற்கு ரூ.200 கோடியில் நடை பாதைகள் அமைக்கப்படும். ஓட்டேரி, விருகம்பாக்கம் கால்வாய்க
ளின் தடுப்புச் சுவர் ரூ.95 கோடி யில் உயர்த்தப்படும். மேலும் குப்பைகள் தேங்காமல் இருக்க பாதுகாப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடியில் பூங்காக்கள், பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும். ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பினை தவிர்க்கவும் ரூ.120 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.60 கோடியில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும். அனைத்து மண்டலங்களிலும் ரூ.45 கோடியில் உள்ள விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.
நவீன வசதிகளுடன் கூடிய உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும். கள்ளிக்குப்பம், வில்லிவாக்கம்,சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் இறைச்சிக் கூடங்கள் ரூ.60 கோடியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். சென்னையின் முக்கிய இடங்களில் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பு மூலம் நவீன வசதிகளுடன் கூடிய உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும் என்றார்.
 முன்னதாக தனது பதிலுரையில், கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநக ராட்சிகள், 31 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது ரூ.17,455 கோடியில் 23 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வரு கின்றன. மேலும் 16 கூட்டுக் குடி நீர் திட்டங்களை செயல்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் நேரு.